Wednesday, December 1, 2010

உள்ளதைச் சொல்லுகிறேன்...




பசிக்காத  வரம் தருகிறேன் கொஞ்சம் பழைய சாதம் இருந்தா போடு! என்று கேட்டானாம் ஒரு சன்னியாசிப் பரதேசி.

“நேர நிர்வாகம் என்கிற தலைப்பில் சுய முன்னேற்றப் புத்தகங்கள்!!! தன்னம்பிக்கை தர்ம கர்மாதிபதி லேனா தமிழ்வாணன்,இப்பொழுது திருச்சி,தஞ்சை,மதுரை,நெல்லை என்று ஒவ்வொரு ஊராகப்போய் ‘நேர நிர்வாகம்பற்றி லெக்சர் கொடுக்கிறார்.அதாவது அவருடைய சுய நேரம் பயனுள்ள வகையில் கழிகிறது.அந்த பேச்சிக்கு அவர் டிமாண்ட் செய்த தொகை,கட்டணமாகக் கைக்கு வந்து சேர்கிறது.வந்து விடுகிறது என்ன! முன்பே வந்து விட்டது! அதாவது ரூபாயை வரவு வைத்து கொண்டு தான் தேதி கொடுத்திருப்பார்.

சரி, பேசியவனூக்கு பேரமும்,காசும் கிடைத்தது. கேட்டவன் கதை?? தேருக்கூத்து பார்த்த கதை தான்! வெட்டி வேலை!இந்த நேர நிர்வாகப் பேச்சை கேட்ட நேரத்தில்,வீட்டில் எருமை மாட்டுக்கு “உண்ணிஎடுக்கும் வேலையில் ஈடுப்படிருந்தாலும் உருப்படியாக தான் இருந்திருக்கும் என்பது பிறகுதானே புரிய வருகிறது.

தன்னம்பிக்கைத் தொடர், தன்னம்பிக்கை புத்தகம் எல்லாம் சூடாக விற்பனையாகின்றன.இவை சூசகமாகச் சொல்வது என்ன? நம் ஒட்டுமொத்த சமூகமும் தன்னம்பிக்கை அற்றுத் திரிகிறது.

மந்திரத்தால் மாங்காய் விழுமா? விழுமானல், புத்தகத்தால் தன்னம்பிக்கை பிறந்துவிடும்.உளவியலார்கள் என்ன சொல்லுகிறார்கள்? ஒரு மனிதன் பிறந்து வளர்ந்த சூழ்நிலை,குடும்ப வறுமை அல்லது செழுமைப் பின்னணி,பெற்றோரின் குணம் அல்லது வளர்ப்பு முறை-இதுவே ஒரு மனிதனின் மனோபாவத்திற்க்குக் காரணம் என்கிறார்கள்.

வேதாந்திகள் சொல்வது வேறு,ஒரு மனிதன் பிறந்த ஜாதகத்தில் தைரிய ஸ்தானத்தில் உச்ச கிரகம்,நீச கிரகம் இருப்பது,போவது,வந்து வந்து போகிற கிரக சஞ்சாரம் அப்புறம் லக்னாதிபதி,ராசியாதிபதி எங்கெ எந்த வீட்டில் இருக்கிறான்,எந்த வீட்டைப் பார்க்கிறான் இதையெல்லாம் அடிப்படையாகக் கொண்டே ஒருவனது குணநலன்கள் அமைகிறது என்கிறார்கள்.

ஒரு வேளை இதுதான் சரியோ என்று கூட நினைக்கத் தோன்றும்.காரணம்,ஒரு குடும்பத்தில் நான்கு அண்னன் தம்பிகள் இருப்பர்.ஒருவன் முட்டாள்,ஒருவன் புத்திசாலி,மற்றொவன் முரடன்,கடைசியானவன் கோழை என்றாலும் மூளைத்திறனும்,குணநலன்களும் ஒருவருக்கொருவர் மாறுபடுகின்றனர்.ஒரே குடும்பம்,ஒரே குடும்பச் சூழ்நிலை அப்படியிருந்தும் இந்த குணநல வேறுபாடுகளுக்குக் காரணம் என்ன? புரியவில்லை.

தாழ்வு மனப்பான்மையைப் போக்குவது எப்படி? தன்னம்பிக்கைக் குறைவுக்கு இந்த தாழ்வுமனப்பான்மைதானே காரணம் என்று கூறுகிறார்கள்,எழுதுகிறார்கள்.

ஆனால் தாழ்வுமனப்பான்மை என்பது மூன்றுமாத குழந்தையாக இருக்கும் போதே மனிதனுக்கு ஏற்பட்டு விடுகிறதாம்.உளவியலார்கள் கருத்து இது. எப்படி? மூன்று மாத குழந்தை தூங்குகிறது.அதன் உடலின் மீது தாயார் ஒரு துணியைப் போர்த்தியிருகிறாள். குழந்தை விழித்துக் கொள்கிறது.அதற்குத் தன் மேல் போர்த்தப்பட்டுள்ள துணி ஒரு இடையூறாக இருக்கிறது.அதனால் தன் காலால் உதைத்து உதறித் துணியை விலக்குகிறது.ஆனால் துணியோ அதன் கால்களில் சிக்கிக் கொள்கிறது.காலில் சிக்கியத் துணியை மேலும் உதறி உதறிப் பார்க்கிறது.துணி மேலும் கால்களில் சிக்கிக் கொள்கிறதே தவிர,தன் முயற்சியில் வெற்றிப்பெற முடியாமல் போன குழந்தை தாழ்வு மனப்பான்மையுற்று அழ்த்தொடங்குகிறது.ஆக மூன்றாம் மாதத்தில் தாழ்வுமனப்பான்மை தோன்றுகிறது.

சரி,தன்னம்பிக்கை கொண்டு சராசரி மனிதன் எப்படி வாழ வேண்டும்,வாழ்வில் உயர வேண்டும் என்று வாழ வழி சொல்லும் நபர்கள் யார் என்று பார்த்தால்... அந்தோ பரிதாபம்! அதை நாளை பார்ப்போம்.  

தனா

Tuesday, November 30, 2010

அலை கோரும் மன்னிப்பு..!!!



சுனாமிக்கு பிறகு
கடல் அலைகள்
எத்தனை முறை என்
கால்களை தழுவினாலும்
மன்னிப்பே இல்லை....

தனா

இவ்வுலகமே வேண்டாம்!!!


காதலில் வென்ற பின்
    காதலியை வீழ்த்தி விடு
இழுத்து அணைத்தபடி
    இதயத்தில் சத்தமிடு
இதழ்களைச் சேர்த்தபடி
    ஆனந்த முத்தமிடு
அவளின் இதயத்தில்
     உன்னை நுழைத்துவிடு
அவளை கைபிடித்தால்
    இவ்வுலகில் வேறு எதுவும் வேண்டாம்
 அவளை கை பிடிக்காவிட்டால்
     இவ்வுலகமே வேண்டாம்!!!




தனா

Monday, November 29, 2010

கண்மனியில் கண்ட- கவிதை





கண்மனியில் கண்ட உன்னை காதலிக்கச்
                                              சொல்லுதடி மனம்,
காதலித்த உன்னைக் காண மனம்
                                              ஏங்குதடி தினம்,
நான் காணும் கனவோடு
                                              நீ கலக்க வேண்டும்,
நித்திரையில் நீங்காத
                                             உன் முகம் வேண்டும்,
உன் செவ்விதழ் திறந்து
                                            பேசினால் என்னிடத்தில்,
அதற்காக என் உயிரையும்
                                            தருவேன் உன்னிடத்தில்
உன் கடைக்கண் பார்வை
                                           என் மீது பட்டால் போதும்
காற்றே இல்லாத உலகில்
                                          நான் வசிப்பேன்....!!!!           


 தனா

Saturday, November 27, 2010

மந்திரப்புன்னகை


நியாயமாக இந்த படத்திற்குதான் 'குவாட்டர் கட்டிங்' என்று பெயர் வைத்திருக்க வேண்டும். குடிக்கிறார்கள்... குடிக்கிறார்கள்... குடிக்கிறார்கள்... பார்க்கிற நமக்கே போதையேறுகிற அளவுக்கு குடிக்கிறார்கள்! இது போதாதென்று கரு.பழனியப்பனின் வசனங்கள் ஒவ்வொன்றும் தனி போதையாகி தள்ளாட வைக்கிறது! (மடக்கி போட்டா கவிதை, மாரு வலிக்க பேசினா வசனம்ங்கிறதை தகர்த்து தரை மட்டமாக்கியிருக்கிறார் பழனியப்பன். ஒவ்வொரு வரியும் மகா பரமஹம்சர்கள் கூட சொல்லாத தத்துவங்கள்) ஒரு உளவியல் படத்தை ராவாக சொல்லாமல், நைய அரைத்த மாவாக சொல்லியிருப்பதுதான் இந்த படத்தின் விசேஷம்!
தனி பிளாட், தனிமை வாழ்க்கை, 'தண்ணி'யாக கரைகிற நிமிடங்கள் என்று தனது தாடியை விடவும் கருப்பான வாழ்க்கை வாழ்கிறார் ஹீரோ பழனியப்பன். அவ்வப்போது பெண்கள் என்பது அடிஷனல் பழக்கம்! "நீ நல்லவன் கிடையாது. உனக்கு நல்ல பொண்ணு கிடைக்க மாட்டா. உன்னை மாதிரி ஆளுக்கு எல்லாம் நல்ல பொண்ணு கிடைச்சுட்டா நல்லவனுக்கு எல்லாம் பொண்ணு எங்கே கிடைக்கும்?" இப்படி அவர் அப்பாவே கேட்கிற அளவுக்கு ரொம்ப நல்லவர்தான்(?) கரு.பழனியப்பன். "என்னை ஆண்டவன் தப்பா படைச்சுட்டான். மேனுபேக்சரிங் டிஃபெக்ட், மாத்த முடியாது" என்று அவரே ஒப்புதல் தருகிறார் ஒரு காட்சியில்.


அப்படிப்பட்ட இவரையும் ஒருத்தி காதலிக்கிறாள். காதல் கைகூடுகிற நேரத்தில் அவளையும், வேறொருவனையும் ஒரே படுக்கையறையில் ஒன்றாக பார்க்கிற பழனியப்பன் அவளை கொலை செய்துவிட்டு போலீஸ் ஸ்டேஷனில் சரணடைகிறார். அப்புறம் என்னாச்சு என்று நிமிர்ந்து உட்கார்ந்தால், நமது எண்ணத்தை தவிடு பொடியாக்கிவிட்டு ஜம்மென்று விரிகிறது வேறொரு டிராக்!
தனக்கு என்ன வருமோ, அதை தேர்வு செய்திருப்பதற்காக கருவுக்கு ஒரு பலே போடலாம்! அந்த குடி பாடலில் மட்டும் கொஞ்சம் சிரமப்பட்டிருக்கிறார். இவர் பேசும் பல வசனங்களுக்கு சென்சாரில் சைலண்ட் போட்டிருக்கிறார்கள். (ஆனாலும் "தேவ்டியா வீட்டுல இருக்கேன்" என்பது போன்ற வசனங்களை என்ன செய்து சிதைச்சாலும் புரிஞ்சுப்போம்ல...) தமிழ்சினிமா கால காலமாக பூஜித்து வந்த அம்மா சென்ட்டிமென்ட் இந்த படத்தில் சர்வ நாசம்! "நாம பிறக்கலைன்னா அம்மாவுக்கு பேரு மலடி. தெரியும்ல" என்கிற போது கரு.பழனியப்பனின் கழுத்தை நெறித்தால் கூட என்ன என்றுதான் தோன்றுகிறது. ஒரு கார்த்திகை திருநாளில் பிளாட் எங்கும் அகல் விளக்கு எரிய, ஒரு சிகரெட்டை உதட்டில் பொறுத்திக் கொண்டு நெருப்பு தேடும் அவர், அடுத்து என்ன செய்வாரோ என்ற பதற்றத்தை ஏற்படுத்துகிறார். நல்லவேளை...
சந்தானம் இப்போதெல்லாம் படத்தையே தாங்கி பிடிக்கிற அளவுக்கு வளர்ந்துவிட்டார். இந்த படத்தில் இன்னும் ஒரு ஸ்டெப் ஜாஸ்தி. மனைவியை குளிர்விக்க நினைக்கும் அவர், கிஃப்டுடன் வீட்டுக்கு போக, அதுவே அவருக்கு வினையாகி தொலைப்பதெல்லாம் பயங்கரம். "கண்ணை மூடேன். நான் ஒண்ணு வாங்கிட்டு வந்திருக்கேன். காட்றேன்". இது சந்தானம். "கண்ணை தெறந்தாலும் நான்தானே பார்க்க போறேன். பரவாயில்ல. காட்டுங்க" இது பெண்டாட்டி. (யப்பா, ஒரு முடிவு பண்ணியே பேனாவை திறந்திருப்பாங்க போலிருக்கு!) ஆனால் செத்த கிளி ஜோக்கெல்லாம் ரொம்ப 'கிலி' சார்!
ஒரு நவநாகரீக பெண்ணின் யதார்த்தத்தோடு மீனாட்சி. பீர் பாட்டிலை பல்லால் திறக்கும் ஸ்டைலையும், உன்னை எங்கெல்லாம் பார்த்தான் தெரியுமா என்று அங்கலாய்க்கும் தோழியிடம், பார்த்துட்டு போகட்டுமே, அதனால் கற்பு ஒண்ணும் கெட்டு போயிடாது என்று ஜோவியலாக எடுத்துக் கொள்வதையும் பார்த்தால் நெஞ்சில் பஞ்சடைக்கிறது. க்ளைமாக்சில் "அன்பை தாங்க முடியலையே உன்னால்" என்று கரு.பழனியப்பனிடம் கலங்குவது நெகிழ்ச்சி! மீனாட்சிக்கு இன்னும் கொஞ்சம் சதை பிடிப்பு இருந்திருந்தால் நமக்கும் அவர் மேல் ஒரு 'பிடிப்பு' இருந்திருக்குமோ?


குறிப்பிட்டு சொல்ல வேண்டியவர் நகுலன் பொன்னுசாமி. அவ்வப்போது பிள்ளையை பார்க்க பிளாட்டுக்கே வருவதும், சிற்சில அட்வைஸ்களை அள்ளி விடுவதுமாக அசர வைக்கிறார். கிராமத்தில் நடக்கும் அந்த பிளாஷ்பேக்கிலும் என்ன ஒரு தெளிவு அவரிடம்! வீட்டை பூட்டிய எதிர்வீட்டுக்காரை எவ்வளவு தன்னம்பிக்கையோடு கேள்வி கேட்கிறார்! ஆனால்... அத்தனையும் பொய்யாகிற போது அவர் எடுக்கிற முடிவு திடுக் திருப்பம்.
பிளாட் செகரட்டரியாக வரும் தம்பி ராமைய்யாவும், அவரிடம் "என் பொண்டாட்டி எங்கே-" என்று சீனுக்கு சீன் கேட்கும் அந்த குடிகாரரும் கூட மனதில் நிற்கிறார்கள். பழனியப்பன் கட்டிலுக்கு அவ்வப்போது வந்து போகும் மகேஸ்வரி, கிராமத்து அம்மா ரம்யா. இந்த பெண்களின் ஷேடோவில் புதுப்புது அர்த்தங்களை சொல்லியிருக்கிறார் கரு.
ராம்நாத் ஷெட்டியின் ஒளிப்பதிவு எல்லா காட்சிகளையும் நிஜம்போல உணர வைக்கிறது. வித்யாசாகரின் பாடல்களில் சட்ட சடசட... அன்பில்லாம கரைஞ்சது போதும்... இந்த வருடத்தின் மஹா மெலடிகள்!
அட... கரு.பழனியப்பனின் டில்யூஷனில் கூட ஸ்ரீகாந்த் வருகிறாரப்பா. (பழைய பாசம்!)
விஷ§வல் ட்ரிட் தெரியும். அதனுடன் டயலாக் ட்ரீட்டும் இணைந்தால் அதுதான் மந்திரப்புன்னகை!
மொத்ததில் மந்திரப்புன்னகை - தந்திரம்

தனா

கோடம்பாக்கம் ஜெரி லூயிஸ்


கோடம்பாக்கம் ஜெரி லூயிஸ்

    


கிட்டத்தட்ட 1000க்கு மேற்பட்ட தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்துள்ள நாகேஷ் கடைசியாக நடித்த படம் தசாவதாரம் உடல் நிலை சரியில்லமால் மருத்துவமனையில் இருந்தபோது கூட ஷுட்டிங் வந்து நடித்துக் கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.நல்ல படத்தில் நடித்த திருப்தியோடு பொகிறேன்என கமலஹாசனிடம் சொல்லிவிட்டு போய் இருக்கிறார்.

ஹாலிவுட் காமெடி நடிகர் ஜெரி லூயிஸ் மீது இவருக்கு அளவு கடந்த ஈடுபாடு.தன்னையும் அவ்வாறே தயார்ப் படுத்திக் கொண்டார்.இவரை கோடம்பாக்கம் ஜெரி லூயிஸ் என்று அழைத்துள்ளனர். தமிழக அரசின் கலைமாமணி விருதும் பெற்று உள்ளார்(1974).தமிழ்நாடு மாநில விருது(1994) பெற்றுள்ளார்.





தனது சிறுவதில் ஏற்பட்ட சின்னம்மை காரணமாக முகத்தில் தழும்புகள் ஏற்பட்டன.தன்னால் சினிமாவில் நடிக்க முடியாமல் போய்விடுமோ என மிகவும் கவலைப்பட்டுள்ளார்.அந்த வேதனைகளைத் தான் “சர்வர் சுந்தரம்படத்தில் தத்ரூபமாகக் காட்டியிருப்பார்.

மூன்று தலைமுறை நடிகர்களோடு நடித்த பெருமை கொண்டவர்.கருப்பு வெள்ளை சினிமா முதல் இன்று வரை உள்ள நடிகர்களூக்கும் கதைக்கேற்ப தன்னை மாற்றி நடிக்கத் தெரிந்தவர்.நிஜ மனிதர்களைப் பார்த்து நடிக்கப் பழகியவர்.

 கடந்த ஆண்டு பிப்ரவரி நான்காம் தேதி அனைவரையும் சிரிக்க வைத்த நாகேஷ் என்னும் மகா நடிகர் தனது மூச்சை நிறுத்திவிட்டார்.தமிழ் திரைவயுலகமும்,அரசியல் உலகமும் திரண்டு அவருக்குக் கண்ணீர் அஞ்சலி செலுத்தியது.





குண்டுராவ் என்னும் பெயருடன் மைசூரில் பிறந்து,தாராபுரத்தில் பெற்றோருடன் வாழ்ந்து,கோவையில் படித்து,சென்னை ரயில்வேயில் குமாஸ்தா வேலையில் அமர்ந்தார். சுருக்கமான அவரது வாழ்க்கை பயணம் இது தான்.

நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால், நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.1959ம் ஆண்டு தாமரைக்குளம் என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார். இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் நீர்க்குமிழி,சர்வர் சுந்தரம்,எதிர் நீச்சல் போன்ற படங்கள் நாகேஸை வெறு ஒரு பரிமாந்த்திற்கு எடுத்துச் சென்றது.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி,காதல் மன்னன் ஜெமினி கணேசன் போன்றவர்கள் நாகேஷின் வரவுக்காகக் காத்திருந்த காலங்கள் உண்டு.1960-1070 களில் கொடி கட்டி பறந்தவர்.

இவர் மீது நடிகர் கமலஹாசனுக்கு எப்போதும் தனி மரியாதை உண்டு.

சிரிக்க வைத்த இந்த நாயகனை நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

               



தனா

Thursday, November 25, 2010

எந்திரனும் சில போஸ்மார்டம் ரிப்போர்ட்டுகளூம்…

எந்திரன் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தாலும் பல ரஜினி ரசிகர்களுக்கு திருப்தியின்மை இருக்கிறது. வழக்கமான ரஜினியின் பஞ்ச் டயலாக், டாஷிங் ஓப்பனிங், லாஜிக் மீறின சண்டை காட்சிகள், என்று ஒரு ரஜினி ஓப்பனிங் சீன் கூட இல்லாமல் ரஜினி படம் செரிக்காமல் இருக்கிறது தீவிர ரஜினி ரசிகர்களுக்கு என்று ஒரு பக்கம் கருத்துக்கள் எழத்தான் செய்கிறது. ஆனால் என்னை போன்ற ஒரு சினிமா ரசிகர்களுக்கும், குழந்தைகளுக்கும்  இந்த ரஜினி பிடித்திருப்பது நிஜம்.

என் இரண்டாவது பையன் எந்திரன் படம் பார்த்துவிட்டு சிட்டியோடு ஒன்ற ஆரம்பித்துவிட்டான். கிராபிக்ஸையெல்லாம் சந்தோஷமாய் கண்டு களித்தவன். கடைசியில் மூட் அவுட். சிட்டி தன்னை டிஸ்மேண்டல் செய்யும் காட்சியில் கிட்டத்தட்ட அழும் நிலைக்கு வந்துவிட்டான். இப்படத்தை பற்றி பலர் ஜெட்டிக்ஸ் சேனலில் வரும் கதை, கார்டூன் படம், என்றெல்லாம் கூட சொல்கிறார்கள். ஆனால் நிஜமாகவே அவர்களை கவரும் வகையில் படமெடுப்பது மிகவும் கஷ்டம்.

அடுத்த குற்றச்சாட்டு, படம் சயின்ஸ்பிக்‌ஷனாகவும் இல்லாமல், மசாலாத்தனமாய் இருக்கிறதென்று. நம்ம ஆளூங்களுக்கு ஒரு பார்ஷியாலிட்டி உண்டு. அது என்னவென்றால், வெள்ளைக்காரன் சூப்பர், நாம் செய்தால் அது மொக்கை. ஜேம்ஸ்பாண்ட் தன்னுடய படங்களில் இடுப்பு பெல்டிலிருந்து ஒரு டிரிக்கரை அழுத்தினால் எதிரி குண்டடித்து செத்துப்போவான் என்றால் நம்புவார்கள். மச்சான் ஜேம்ஸ்பாண்ட் இடுப்பு பெல்ட்டுல ஒரு துப்பாக்கி வச்சிருக்காண்டா.. என்பவர்கள், கமல் விக்ரமில் ஒரு லாக்கரை திறப்பதற்கு ஒரு சின்ன கைகடிகாரத்தை மினி பாம் எக்ஸ்போடராக மாற்றி வெடிக்க வைத்து திறப்பார். அதை “த..பாருடா.. இவரு கைல வாச்சுலேர்ந்து ஒரு ஆண்டனா இழுப்பாராம்.. அதை வச்சு வெடிக்க வைப்பாராம். நல்லா உடறாண்டா ரீலு “ என்பார்கள். இம்மாதிரியான உரையாடல்களுக்கு இது ஒரு உதாரணமே.. இது போல பல விஷயஙக்ள் இருக்கிறது.
 enthiran` அது போலத்தான் எந்திரனும், வெளிநாட்டு படங்களில் ஒரு ஜெனர் படங்கள் என்றால் கதை அதற்குள்ளேயே சுற்றி வரும் நம் தமிழ் படங்களை போல தலை வாழை இலை போட்டு, காதல், பாட்டு, செண்டிமெண்ட், காமெடி, செக்ஸ் என்று எல்லாவற்றையும் கலந்து கொடுக்க வேண்டிய கட்டாயமில்லை.  அந்த வகையில் பார்த்தால் எந்திரன் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நிகழ்வுதான். ஏனென்றால் தமிழ்ல் எம்.ஜி.ஆர். பிட்டு கேரக்டரில் நடித்த ஒரு பழம் பெரும் தமிழ் திரைப்படத்தில் வெளிகிரகத்திலிருந்து ப்றக்கும் தட்டிலிருந்து இறங்கும் மனிதர்களை பற்றி ஒரு படம் எடுத்தாக கேள்விபட்டதுண்டு.  பின்ன்அரும் ஆங்காங்கே ஒரு சில படங்கள் அங்கேயும் இல்லாமல், இங்கேயும் இல்லாமல் சில படங்கள் வந்திருந்தாலும், முழுவதும் சயின்ஸ்பிக்‌ஷனாக ஒரு தமிழ் படம் உலக அளவில் ஹாலிவுட் தரத்திற்கு ஒரு குவாலிட்டியான அனிமேஷன், சிஜியுடன் வந்திருப்பது பாராட்டுக்குரியது.
ரஜினிக்கும் அவருடய திரையுலக வாழ்க்கையில் இப்படம்  மைல்கல் என்றே சொல்ல வேண்டும். ரஜினி என்கிற கரிஷ்மாவை மீறி ரஜினி என்கிற நடிகனை மீட்டுக் கொண்டு வந்திருக்கிறது இப்படம்.

எந்திரன் ஒரு Half Baked மசாலா சயின்ஸ்பிக்‌ஷன் என்பவர்களுக்கெல்லாம் ஒரு விஷயம் சொல்லிக் கொள்கிறேன். ஹாலிவுட் சயின்ஸ்பிக்‌ஷன் மசாலாக்களுக்கு இது ஒன்றும் குறைவில்லை. நிச்சயம் இப்படத்தை ஒரு முகம் தெரியாத அவ்வளவாக பிரபலமில்லாத ஒரு ஹீரோவை வைத்து ஹாலிவுட்டில் படமெடுத்து ஹிட்டடித்திருப்பார்கள். ஆனால் அதே விஷயத்தை இங்கே மக்களுக்கு கொண்டு செல்ல ஒரு கமலோ, ரஜினியோ தேவை. இது ஒரு ஆரம்பம் தான். நிச்சயம் இப்படத்தின் வெற்றி மேலும் சிறந்த சயின்ஸ் பிக்‌ஷன் படங்களை தமிழ் திரையுலகுக்கும் கொடுக்குமென்ற நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறது.

தனா